Karuveppilai sadam seivathu eppadi Pdi jeyashri ygambal sundar in tamil கறிவேப்பிலை சாதம் How to make Curry Leaves Rice | variety rice
Karuveppilai sadam seivathu eppadi in tamil
நமது ஊரில் எளிதில் கிடைக்கக்கூடிய, மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கருவேப்பிலை. கருவேப்பிலை உடல் உஷ்ணத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும் ஒரு அருமருந்தாகும். இந்த அருமருந்தை தொடர்ந்து உணவில் சேர்த்து வர பல விதமான நன்மைகள் ஏற்படும். அதுவும் தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமைகிறது.
இந்த கருவேப்பிலை பயன்படுத்தி சுவையான சாதம் ஒன்றை செய்யப்போகிறோம்.
கடாயில் நெய்யை ஊற்றி கருவேப்பிலையை நன்கு முறுகலாக வறுத்து, பின்பு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வடித்து வைத்த சாதத்தை சற்று அகலமான பாத்திரத்தில் ஆறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மற்றும் வரமிளகாயை போட்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் அதனுடன் மிளகுத்தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.
பிறகு ஆற வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.