மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி? மரு உதிர என்ன செய்ய வேண்டும்? மரு நீங்க ஆங்கில மருந்து… இப்படி மருக்கள் சம்பந்தமாக நமது மனதில் ஆயிரம் கேள்விகள் உண்டு..
மருவை போக்க ஒரு சூப்பர் டிப்ஸ்.. இதை ஒரு தடவை செய்தால் போதும் மருவை நிரந்தரமாக நீக்கும் வலியில்லாத வீட்டு வைத்தியம்.
மருக்கள் கழுத்து, முகம், மார்பு பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகும். சருமத்தை கெடுக்கும் இந்த வகையான மருக்கள் நமது அழகையும் சேர்த்து கெடுக்கிறது. நமது முன்னோர்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினால் இந்த முறைகளை எளிதில் அகற்றி விட முடியும்..
நமது வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு மருக்களை எப்படி போக்குவது என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்…
இஞ்சி – Ginger
சிறு துண்டு இஞ்சியை எடுத்து தோல் சீவி அதில் இருந்து சாறெடுத்து மருக்கள் மேல் தேய்க்க வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்வதன் மூலம் மருக்கள் உதிர்ந்து, நிலைக்கு உங்களின் தோல் வந்துவிடும்.
வெங்காயம் – Onion
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உண்டு. அதே போல் மருக்களைப் அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. வெங்காயத்தை அரிந்து உப்பில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து அதை மருக்கள் உள்ள இடத்தில் நன்கு தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து சுடுநீரால் கழுவ வேண்டும். இப்படி செய்து வர உங்களின் மருக்கள் உதிரும்.
பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்க
மரு மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.
பருக்கள் வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.