Thozhil vetri pera | Thozhil valarchi pera | Thozhil valarchi in tamil
வாஸ்து படி நம் வீட்டில் பொருட்களை அடுக்கி வைக்கிறோம். வாஸ்து விதிக்கு முரணான பொருட்கள் இருந்தால் நல்லது நடக்காது, வருமானம் குறையும், பணம் நஷ்டம், தீமை நடக்கும் என்பதை பலரும் நம்புகின்றனர்.
தொழில் செய்பவர்கள் நஷ்டம் அடையாமல் இருக்கவும் லாபங்கள் பல ஈட்டவும் செய்ய வேண்டிய ஒரு சில வாஸ்து சாஸ்திர விதிகளை இந்த பகுதியில் காணலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, நமது தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால், இவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வாஸ்து பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடகிழக்கு பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி அந்த மூளை சுத்தமாக இல்லாவிட்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும். மன நிம்மதி இருக்காது.
வடக்கே கிழக்கு திசையில் சிறிய கூழையில் நீரூற்றி வைப்பது உங்கள் தொழிலுக்கு நன்மையை தரும். வடகிழக்கு திசையில் நீரூற்று வைத்தால், உங்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
உங்களது அலமாரி வடகிழக்கு திசையை நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும்.
வடகிழக்கு திசையை நோக்கி பூஜை அறை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அது அதிகப்படியான அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வாரி தரும்.
நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் உறங்க கூடாது மற்றும் தலை சீவவும் கூடாது. அப்படி செய்தால் லஷ்மி அங்கு தங்க மாட்டாள்.
உங்கள் வீட்டில் உறங்கும் போது கிழக்கு நோக்கி தலை வைத்து உறங்குங்கள். இப்படி உறங்குவதால் உங்களது மன உறுதி அதிகரிக்கும். தொழிலில் அதிகப்படியான லாபம் பெற்று நீங்கள் வெற்றியின் உச்சத்தை விரைவில் அடைவீர்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். நன்றி வணக்கம்!!!