Pillayar pidipathan palangal Tamil. Manjal pillayar pooja Tamil. மஞ்சள் பிடித்து வைத்து வணங்கி வந்தால் பலன்கள்
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்…..
மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கைப்பிடி மஞ்சளை ஒரு குழந்தையின் கையால் பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார்தான்.
அப்படிப்பட்ட விநாயகரை நாம் எப்படி எல்லாம் பிடித்து வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
மஞ்சளால் விநாயகர் பிடிப்பது
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
குங்குமத்தால் பிள்ளையார் பிடிப்பது
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
புற்று மண்ணால் விநாயகர் பிடிப்பது
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.விவசாயம் செழிக்கும்
வெல்லத்தால் விநாயகர் பிடிப்பது
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.செல்வம் உயரச் செய்வார்
விபூதியால்விநாயகர் பிடிப்பது
விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
விபூசந்தனத்தால்விநாயகர் பிடிப்பது
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.