தோலுடைய முழு உளுத்தம் பருப்பு – 1 1/4 கப் பனை வெல்லம் – 200 கிராம் நெய் 100 கிராம் ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி தண்ணீர் – அரை லிட்டர்
செய்முறை:
உளுந்தை சிவக்க வறுத்து நன்கு பவுடராக அரைத்து சலித்து கொள்ளவும். ஒரு உருளியில் தண்ணீர் ஊற்றி பனை வெல்லத்தை இடித்து கரைத்து தெளிய வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் உளுந்து மாவில் கலந்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சுருண்டுவரும் பதம் வந்ததும் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.